புதுச்சேரி, பிப்.28- புதுச்சேரியில் மாவட்ட ஆட்சி யர் உத்தரவு என்ற பெயரில், சிறு கடைகள் மற்றும் சிறு வணி கர்களை குறி வைத்து, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், பெரிய விளம்பரப் பதாகைகள் மற்றும் சாலையோரங்களில் வாய்க்கால்கள் மேல் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்துவோம் என்று கூறி சுதந்திர போராட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்களை தாக்கியதை போல் அரசு அதிகாரிகள் தான்தோன்றித்தன மாக வெயில் மழைக்கு சிறு கடை கள் முன்பு 10 அடி உயரத்தில் மேலே போடப்பட்டிருக்கும் சன் ஷேடுகள், ஷீட்டுகள், கடை பெயர் பலகைகள் உள்ளிட்ட வற்றை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இடித்து அடா வடித்தனத்தை ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடியாட்களை போல் காவல்துறை நியாயம் கேட்பவர்களை கூடவே அடியாட்களை வைத்திருப்பது போல காவல்துறையினரை பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்கின்ற அராஜகம் நடைபெறுவதாக சிறு கடை வியாபாரிகள் குமுறுகின்ற னர். பத்தாயிரம் முதல் 50 ஆயி ரம் வரை சேதத்தை பொதுப்பணித் துறையினர், நகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். கடந்த பிப்ரவரி முதல் வரை சாலை வாரியாக கால அட்ட வணை வெளியிட்டிருந்த நிலையில் கடந்த வாரம் புதுச்சேரி நகரப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஜேசிபி மற்றும் புல்டோசர்கள் கொண்டு அடாவடியில் ஈடுபட்ட போது நகரப்பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடையடைப்பு அதிகாரிகள் அடாவடித் தனத்தை கண்டித்து சமூக அமைப்பு கள் ஒன்று சேர்ந்து புதுச்சேரி நகர பகுதியில் கடைகளை அடைத்து பந்த் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நகராட்சி அதிகாரிகளிடம் சாலை வாரியாக ஒழுங்கு படுத்துவது குறித்து வியாபாரிகளிடம் கலந்து பேசி ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆக்கிரமிப்பு அகற்ற நட வடிக்கைகளை தொடரும்படி அறிவுறுத்தியுள்ளார். அதிகாரியின் ஆணவம் ஆட்சியர் உத்தரவை மீறி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி திங்கட்கிழமை மூலக்குளம் பெரம்பை மெயின் ரோட்டில் ஆக்கிர மிப்பு அகற்றம் என்ற பெயரில் பொதுப்பணித்துறை வாய்க்காலுக்கு உட்பகுதியில் உள்ள ஒரு சிறு உணவகத்தில் உள்ளே புகுந்து கோடை வெப்பத்திற்கு போடப்பட்டி ருந்த சீட்டுகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அடித்து உடைத்துள்ள னர். இதனால் கடையின் ஷட்டர் பெயர்ந்து வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறு உணவகத்தில் பணிபுரியும் தொழி லாளி மற்றும் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஏன் இப்படி அநியாயம் செய்கிறார் என்று கேட்டதற்கு,உழவர்கரை நக ராட்சி அதிகாரி ஒருவர் தான் அணிந்திருந்த காலணியை கொண்டு அடிக்கப் பாய்ந்துள்ளார். அங்கு வாக்குவாதம் தொடர்ந்து நிலையில் நியாயம் கேட்டவர்கள் மீது உழவர்கரை நகராட்சி அதி காரி பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து ஓட்டல் தொழி லாளியை சிறையில் அடைத்த அதிர்ச்சி சம்பவம் நடை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரி விக்கின்றனர். சிஐடியு கண்டனம் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் வேலைவாய்ப்பற்ற மாநிலமாக மாறி யுள்ளது. சமூக குற்றங்கள் அதி கரித்துள்ள நிலையில் படித்து முடித்த இளைஞர்கள் தங்களால் இயன்ற முதலீடு செய்து சிறு கடைகள் வைத்து வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வருகின்றனர்.எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சிறு குறு மற்றும் சாலையோர வியாபாரிகளை துன்புறுத்துவதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் என்.பிரபுராஜ் எச்சரித்துள்ளார்.