districts

img

ஆசிரம முறைகேடுகளுக்கு துணைபோன அதிகாரிகள் விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,பிப்.25- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்ட லப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற முறை கேடுகளுக்கு துணை போன துறை அதிகாரிகளின் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை (பிப். 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா. முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன்,“ பேசுகை யில், குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன 16 பேரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செய லாளர்கள் எம்.முத்துவேல், எம். யுகந்தி, சி.கலியபெருமாள், துணைத் தலைவர்கள் ஏ.வேணு, ஆர்.ரங்கநாதன், அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;