கிருஷ்ணகிரி,நவ.7- அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் அருகில் நூருந்து சுவாமி மலை மலைவாழ் மக்களுக்கு 2018 இல் 53 பட்டாக்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை நிலம் ஒப்படைவு செய்யப்படவில்லை. எனவே, பட்டாக்களுக்கான இடத்தை ஒப்படைவு செய்யக்கோரி மலைவாழ் மக்கள் அஞ்செட்டி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை மனு கொடுத்தும் நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார வடிவேல்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை யில் அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் முரளி,வட்டக் குழு உறுப்பினர் மாரப்பா, மார்க்சிஸ்ட் கட்சி அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவ ராஜன் வாழ்த்திப் பேசினர். பிறகு அஞ்செட்டி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கோட்டையூர் கிராமத்தில் இந்த பட்டாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை வருகிற 14 ஆம் தேதி அளந்து பயனாளிகளுக்கு ஒப்படைவு செய்வதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.