districts

பயன்பாட்டுக்கு வராத வருவாய் அலுவலகம்

சென்னை,அக்.17-  திருவொற்றியூர் அடுத்துள்ள மணலி யில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு திறக்கப்ப படாமல் பூட்டி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவொற்றியூர் தாசில்தார் சரகத்திற்குட்பட்ட மணலி வருவாய் துறை ஆய்வாளருக்கு தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் வாரிசு சான்று, பட்டா மற்றும் வருவாய் துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு வருவாய் ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொள்ள வேண்டிய அவலநிலை இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் மணலி ஜாகிர் உசேன் தெருவில் வருவாய்த்துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டிய கிடக்கிறது. இதனால் வருவாய் ஆய்வாளரை சந்திக்க பொதுமக்கள் வழக்கம்போல் அல்லல்பட வேண்டியதாக உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் அலுவலகம் பூட்டி கிடப்பதால் பயன்படுத்தப்படாமலேயே பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.