districts

சென்னை முக்கிய செய்திகள்

போக்குவரத்துக் கழகங்களில்  தொழில் பழகுநர் பயிற்சி  விண்ணப்பிக்க அக்.21 கடைசி நாள்

சென்னை, அக். 18-  போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:  தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 2020, 21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 341 பேர், பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 158 பேர் என மொத்தம் 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. ரூ.8 ஆயிரம் உதவித்தொகை அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர் www.boat-srp.com என்ற இணையதளத்தில் அக்.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வானோரின் பட்டியல் அக்.28-ம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். நவ.13,14,15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

சென்னை, அக். 18 - ஒன்றிய அரசுப் பணியா ளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவிகித மாக அண்மையில் உயர்த்தப் பட்டது. அதைத்தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் மாநில அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படியை உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.இதனடிப்படையில், 50சதவிகித மாக உள்ள அகவிலைப் படி ஜூலை1ஆம்தேதியைக் கணக்கிட்டு 53சதவிகித மாக உயர்த்தி வழங்கப் படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

கிளை மாநாடுகள்
 

கல்குணம்     - கே.வாசு. கல்குணம் பெண்கள்     - ஏ.வனசுந்தரி. அன்னதானம்  பேட்டை வடக்கு     -எஸ்.செல்வமணி. அன்னதானம் பேட்டை தெற்கு     -  ஏ.செந்தில். கஞ்சமநாதன்பேட்டை     - எஸ்.சரசு. விருப்பாச்சி வடக்கு     -  சுபாஷ் . விருப்பாச்சி தெற்கு     - ஆர். மகேஷ். பெத்தநாயக்கன் குப்பம்     -  ஏ.பிச்சமுத்து. தையல்குணாம்பட்டினம்     -  பி.ராஜாராம். ஆடூர் அகரம்      - வி.பாலமுருகன்.  மேட்டுவெளி      - டி.பாலமுருகன். சோழன் நகர்     - டி. ராதாகிருஷ்ணன். த.பாளையம்      - ஏ.தங்க சிவராமன். தங்களிக்குப்பம்      - எம்.சிவசக்தி. குள்ளஞ்சாவடி     - கே. செல்வராசு. ஆயிக்குப்பம்      - எஸ்.சேகர். இடங்கொண்டான் பட்டு     -  எம்.அஞ்சலை. அகரம்      - எஸ்.சிவசங்கரன். கருமாச்சி பாளையம்      - ஆர். வள்ளி. கோதண்டராம்     -  பி.குமார். ஆலப்பாக்கம்      -  பி.ராஜாராம். பெத்தான் குப்பம்      - ஆர். முருகவேல். மேல் பூவாணி குப்பம்      - ஜி. பாலகிருஷ்ணன். கொத்தவாச்சேரி      - ஆர். தவமணி. வேலை விநாயகர் குப்பம்     -  இரா.நடேசன். வேலம் பிள்ளையார் தோப்பு     - கே.முருகன். சமத்துவபுரம்      - ஆர். விஜயகுமார். ராஜா குப்பம்      - ஆர்.கலைச்செல்வி. அரங்க மங்கலம்     -  எஸ்.ஜெயவேல். பூதம்பாடி      - என்.ரவி. சிங்கபுரி வள்ளலார் நகர்     -  எம்.பூவை பாபு. நயினார் குப்பம்      - ஆர்.குப்புசாமி. கொளக்குடி      - பி.ஜேம்ஸ். பாச்சாரப்பாளையம்     -  சிலம்பரசன். வடக்குத்து கிழக்கு      -  கே. சண்முகம். வடக்குத்து மேற்கு     -  வி.மகாராணி. எல்லப்பன் பேட்டை கிழக்கு     - கே.சக்கரவர்த்தி. எல்லப்பன் பேட்டை தெற்கு    - எம்.கலாவதி. எல்லப்பன் பேட்டை வடக்கு    -  பி.மணிகண்டன். தோப்பு தெரு     - எஸ். கதிர்வேல். ராஜீவ் காந்தி நகர்      - டி. மாயம்மாள். ரயிலடி      - எஸ்.அசோக் ராஜ். கே.கே.நகர்      - வி. மணிவண்ணன். அம்பேத்கர் நகர்     - கே.வீரமணி. பாத்திமா நகர்      - ஆர்.சாந்தி. விழபள்ளம்      - இ.ராணி. மீனாட்சி பேட்டை      - பி. கிருஷ்ணமூர்த்தி. மீனாட்சி பேட்டை நெசவாளர்     -  ஆர்.குமாரி. அண்ணா நகர்      - எஸ். சந்தியா.  கட்டுமானம்      - வி.ஜி.ராமலிங்கம்.  கன்னித்தமிழ்நாடு     - எஸ்.ராஜேந்திரன். பார்வதிபுரம் கட்டுமானம்     -  பி.ராஜலக்ஷ்மி. நெய்சர்     - டி.ராஜேந்திரன். கிராஸ் ரோடு      -  எஸ்.சந்தானம். 5 வது வார்டு      - ஆர். முருகையன். 8 வது வார்டு      - எஸ். கணபதி. 9 வது வார்டு     -  எம். வெங்கடேசன். 14வது வார்டு      - ஸ்ரீராம். கோட்டக்கரை      - ஆர்.ரேவதி. ஆர்.சி.தெரு      -  ஆலிஸ் அருள் ராணி. பார்வதிபுரம்      -  ஆர். கோமேதக வேல். சித்தாலிக்குப்பம்     -  பாண்டியன். கண்ணாடி      - எஸ். ராஜேந்திரன். ஆண்டார் முள்ளி பள்ளம்     -  கிருஷ்ணமூர்த்தி.  பெத்தநாயக் குப்பன்  வடக்கு      - பாக்கியநாதன்.  ஓசூர் மாநகரம் மத்திகிரி      - வி.ரவி. மத்திகிரி (பெ)     - வி.புனிதவள்ளி. மிடுகரப்பள்ளி    - என்.உதய பாரதி. நேரு நகர்    - டி.தேவராஜ்.  சாந்தி நகர்     - எல்.மஞ்சுநாத்.  போக்குவரத்து கிளை     - கே.பிரபாகரன்.  மூக்கண்டப்பள்ளி     - ஆர்.முருகன். ஜுஜுவாடி     - பி.ரசாலம்.  அசோக் லேலண்ட் 1    - பி.ரவி.  ஆவலப்பள்ளி அட்கோ     - கே.குணசேகரன்.  சீத்தாராம் நகர்     - எம்.எம்.ராஜு. அசோக் லேலண்ட் 2    - எஸ்.மணி.  சென்னத்தூர்     - ஒய்.திமிராயப்பா.  சானமாவு ஏ கிளை     - பி.ஆனந்த்.  சானமாவு பி கிளை     - பி.ஜெயம்மா. 

லஞ்சம் வாங்கிய மாவட்ட  கல்வி அலுவலர் கைது

கடலூர், அக்.18-  கடலூர் முதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் உயர்நிலை பள்ளி யில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -ன்  கீழ்  படிக்கும் மாணவர்களுக்கான கல்வி  கட்டணம் ரூ.14,57,056  தமிழக அரசிடமிருந்து வர வேண்டி இருந்தது.  இதற்காக பள்ளியின் தாளாளர் பலமுறை கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை அணுகி  அந்த தொகையை விடுவிக்க கூறினார். ஆனால் இந்த தொகையை விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்த நிலை யில், இந்த லஞ்ச பணத்தைக் கொடுக்க விருப்பமில்லாத பள்ளியின் தாளாளர் பால  சண்முகம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுகினார்.  அதன் அடிப்படையில் அவர்கள் கூறியது போல பணத்தை விடுவிக்க கணேசன் கேட்ட  ரூ.25,000  ரசாயனம் தடவிய ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.  கடலூர் மாவட்ட கல்வி அலுவலக (தனியார் பள்ளி)  கண்காணிப்பாளர்  கணேசன், பள்ளி உரிமை யாளர் பாலசண்முகம் என்பவரிடம் ரூபாய் 25,000  லஞ்சம் பெற்றபோது பதுங்கி இருந்த  கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.சத்தியராஜ் தலைமையிலான காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.