ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றுபவர்கள் தேசிய பேரிடரில் சிக்குபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழனன்று (ஏப்.25) ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது படை வளாகத்தில் நடனம் ஆடிய படி உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். இது உடலுக்கு புத்துணர்வு அளிப்பதாக தெரிவித்தனர்.