வேலூர், மே 20 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ண கிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல குழு கூட்டம் வேலூரில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஜோதி தலைமையில் நடை பெற்றது. மண்டலச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் பங்கேற்று எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கணக்கிட்டு பிரிவு ஊழி யர்கள் கோரிக்கைகளை முன் வைத்து ஜூன் 18 அன்று மாநிலம் முழுவதும் நடை பெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக் கோரி அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இயக்கம் நடத்துவது என்றும் ஜூலை 7 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின்வாரியத்தில் தேங்கி கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும், கேங்மேன் பணியாளர்கள் ஊர் மாறுதல் கோரிக்கையை செயல்படுத்த வலியுறுத்தியும் மற்றும் மின்சார வாரி யத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் உள்ளிட்ட 5 மண்டலங்கள் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.