districts

img

கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை, ஜூன் 19 -

       சென்னையில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

     தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலை யில், சென்னையில் ஞாயிற்றுகிழமை (ஜூன் 18) காலை லேசான மழை தொடங்கியது. பிற்பகலில் மழை நின்றது. இரவு 10  மணிக்கு பெய்யத் தொடங் கிய மழை திங்களன்று (ஜூன் 19) முழுவதும் நீடித்தது. மீனம்பாக்கத்தில் 16 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ., மழை என சராசரி யாக 10.3 செ.மீ. என பதிவாகி  இருந்தது. இந்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

     1996ம் ஆண்டு  ஜூன் மாதத்தில் கனமழை பெய் தது. இதனால் அப்போது பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. 27 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கன மழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

      சென்னையில் நடை பெற்ற மழைநீர் கால்வாய் பணி காரணமாக பெரும் பாலான இடங்களில் மழை வெள்ளம் தேங்கவில்லை. இருப்பினும், கால்வாய்கள் இணைக்கப்படாத இடங்களில் தேங்கிய நீரை  மோட்டார்களை கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மாநகராட்சிக்கு உட்பட்ட புறநகர்ப்பகுதிகள், சென்னை புறநகர்ப் பகுதிளில் ஒரு சில இடங் களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைவெள்ளம் தேங்கி இடங்களில் ஓரிரு மணி நேரங்களில் தண்ணீர் வெளி யேற்றப்பட்டது.

     சென்னை மாநகராட்சி யில் உள்ள 22 பிரதான சுரங்கப் பாலங்களில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் உள்ள கணேசபுரம் பாலத்தில் தண்ணீர் தேங்கிநின்றது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றியதால் சுரங்க பாலத்தில் மீண்டும் போக்கு வரத்து தொடங்கியது.

    கத்திப்பாரா மேம்பால சுரங்கப்பாலத்தில் தேங்கிய வெள்ளத்தில் கார் சிக்கியது. ஓரிரு மணி நேரத்தில் வெள்ளம் அகற்றப்பட்டு, போக்கு வரத்து சரி செய்யப்பட்டது. இதர சுரங்கப்பாலங்களில் தேங்கிய வெள்ளம் உடனுக் குடன் அகற்றப்பட்டது.

     பிரதான சாலைகளில் இருந்த பெரும்பாலான மரங்கள் விரிவாக்கம், மழைநீர் கால்வாய் பணி கள் காரணமாக அகற்றப் பட்டன. இதனால் சாலை களில் மரங்கள் விழவில்லை. மந்தைவெளி, ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்டு 16 இடங்களில் விழுந்த மரங் களை உடனடியாக ஊழி யர்கள் அகற்றினர்.

     மெட்ரோ ரயில் பணி நடைபெறும் பகுதிகளில் சாலைகளின் அகலம் குறுகியதாலும், மழை  நீர்கால்வாய், கழிவுநீர்  கால்வாய்கள் சேதமடைந் துள்ளதாலும் மழைநீர் வெளியேறாமல் தேங்கியது. இதன் காரணமாக வழக் கத்திற்கு மாறாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    ராஜீவ்காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு சாலையில் பெருங்குடி, தரமணி சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. மடிப்பாக்கம் உள்ளிட்ட சில  பகுதிகளில் பாதாள சாக் கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிந்த பிறகும் தெருக்களை  முறையாக சீரமைக்க வில்லை. இதனால் சாலை கள் சேதமடைந்ததால், குடியிருப்புவாசிகள், வாகன  ஓட்டிகள் கடும் சிரத்திற்கு உள்ளாகினர். ஒருசில இடங்களில் வாகனங்கள் சேற்றில் சிக்கின.

விமானசேவை

      சென்னை விமான நிலை யத்திற்கு நள்ளிரவு 2 மணி  முதல் காலை 6 மணி வரை வந்த 10 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

  நீர்வரத்து அதிகரிப்பு

    மழையின் காரணமாக, சென்னைக்கு நீர்வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடையாறு, கூவம் ஆற்றி லும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட உட்புற கால்வாய் களிலும் வெள்ளம் அதிகரித்துள்ளது.

     சென்னை மாநகராட்சி மேயர், துணைமேயர், ஆணையர், கூடுதல் ஆணை யர் போன்றோர் அலுவல்  காரணமாக வெளிநாடுகளில் உள்ளனர். மாநகராட்சி பணிகளை இணை ஆணை யர் (பணிகள்) சமீரன் ஒருங்கி ணைத்து வருகிறார். சென் னையில் 83 இடங்களில் 2 அடி உயரம் வரை வெள்ளம் தேங்கியதாக புகார் பெறப்பட்டு, உடனடி யாக அவை சரி செய்யப் பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.