districts

 தரமற்ற சாதனம்: நிறுவனம் மீது வழக்கு

சென்னை,மார்ச் 17 கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் பயன்படுத்த தரம் குறைந்த தயாரிப்புகளை விநியோகம் செய்த  பிஐ மார்க்கெட்டிங் அன்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது   ஹைதராபாத் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது.  ஐப்பானை சேர்ந்த டெய்கி குழுமத்தின் துணை நிறுவனமான ஆக்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கை யாளர்களுக்கு பிஐ மார்க்கெட்டிங் நிறுவனம் விநியோகம் செய்தபோது இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது.   வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில்  டெய்கி  நிறுவனம் பஞ்சார ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்தது.