திருவண்ணாமலை, மே 30- இணை மின்சாரத்தை வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தை வழங்கா மல் அலைக்கழிக்கும் மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலையின் கிளைத் தலைவர் பெ.அரிதாசு தலைமை தாங்கி னார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் பா.செல்வன் ஆகியோர் பேசினர். இதில் மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், தொழிற்சங்க தலைவர்கள் வெங்கடேசன், அப்துல் காதர், வே.சங்கர், மலை சங்க நிர்வாகிகள் மாரி முத்து, விவசாயிகள் சங்க நிர்வாகி ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வெட்டுக் கூலியாக டன் ஒன்றுக்கு 1,800 ரூபாய், லாரி மாமூலாக டன் ஒன்றுக்கு 500 ரூபாய் என மொத்தம் 2,300 ரூபாய் செலவாகிறது. ஆனால் டன் ஒன்றுக்கு கிடைக்கும் விலையோ 2,820 ரூபாய்தான். இதனால் நடவு கூலி, பராமரிப்பு, நீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல் என விவசாயிகளின் உழைப்பு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் விவசாயம் செய்வதா? அல்லது விவ சாய நிலத்தை விற்பனை செய்வதா என்ற நிலைக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இணை மின் உற்பத்திக்கான பணத்தையும் வழங்காமல் அலைக்கழிக்கும் டேன்ஜேட்கோ கூடுதலாக மன உளைச்சலை ஏற்படுத்துவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.