கடலூர், மே 11-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரண மாக தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங் களிலும், கடலூரில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழ க்கிழமை (மே 11) காலை புயலாக வலுவடைந்து வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ஆம் தேதி வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் ஆகிய 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக் கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.