ராணிப்பேட்டை, அக். 15 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கிய உழவர் சந்தையில் விவசாயிகளிடம் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அதிகாரிகள் என கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு தினமும் குலுக்கல் முறையில் ஒரு கடை ஒதுக்கப்படுகிறது. ஆனால் எப்பிஓக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் நிரந்தரமாக ஒதுக்கி உள்ளனர். அவர்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யாமல் விவசாயிகள் விற்பனை செய்யும் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க தலைவர்கள் முறையிட்டனர். இந்நிலையில், உழவர் சந்தை விற்பனையாளர்களிடம் திங்களன்று (அக். 14) துணை இயக்குநர் (வேளாண்மை) ஆர். சீனிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படாததால் உழவர் சந்தை விற்பனையாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.