districts

img

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்,ஜூலை 8 - நெய்வேலி என்எல்சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால்  தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல் பட்டு வருகிறது.  இரண்டா வது நிலக்கரி சுரங்கத்தில் திங்கட்கிழமை காலை வழக்கம் போல் தொழிலா ளர்கள் பணிக்கு வந்தனர்.  முதல் ஷிப்ட் பணியில் ஈடுபட்டிருந்த அன்பழகன் என்ற சொசைட்டி தொழி லாளி நிலக்கரி சுரங்கங் களில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியில் இருந்தார்.  அப்பொழுது அவர் அந்த கன்வேயர் பெல்ட்டிற்கும் அடியில் உள்ள ரோலர் பகுதி யில் திடீரென சிக்கிக்கொண் டார். அதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த நிலையில் சக தொழிலா ளர்கள் கன்வேயர் பெல்ட் நிறுத்தி அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அன்பழகன் உடலை மீட்டனர். அன்பழகன் உடல் நெய்வேலி என்எல்சி நிறுவன மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள் ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்எல்சி நிறு வனம் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உடன டியாக உயர்மட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர்.