நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 14 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாதர் சங்க நிர்வாகிகள் வி.மேரி, பி.மாதவி, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.