காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆகியோர் தமிழ் மொழியை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சான்று வழங்கினார். துறையின் செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந. அருள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.