சென்னை, ஜூன் 24-
சுகாதாரத்துறையில் புதிய கண்டுபிடிப்பு கள் மக்களின் உயிரைக் காப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறினார்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரிஸ் என்ற பெயரில், ரோபோக்களின் உதவியுடன் துல்லிய மான அறுவை சிகிச்சைகள் செய்யப்ப டும் திட்டத்தை தொடங்கி வைத்துப்பேசிய அவர்,
“பொறியியாளர்களும் மருத்துவ நிபுணர்க ளும் கூட்டாக செயல்படும் போது ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற அதி நவீன அறுவை சிகிச்சைகள் மக்களுக்கு கிடைக்கின்றன என்றார்.
இதனால் உடலில் துல்லிய மான இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் ரத்த இழப்பு இல்லை.மேலும் நோயாளி மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதல் மருத்து வமனையில் நீண்ட நாட்கள் தங்கவேண்டியதில்லை. இதனால் செலவு கணிசமாக குறையும் என்றார்.
சென்னை ஐஐடியில் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுடன் இணைந்து, காவேரி மருத்துவமனை, மருத்துவப் பாதுகாப்பில் மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டுவர உள்ளது எனறும் அவர் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் பிளஸ் டூ முடித்த மாணவர்க ளுக்காக வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
காவேரி மருத்துவமனை யில் மாநிலத்திலேயே சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்காக முதன் முதலாக ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதை மருத்துவமனை யின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
இரைப்பைக் குடலியல், கல்லீரல் – கணை – பித்தப்பை அறுவை சிகிச்சை, சிறுநீர் பாதை யியல், புற்றுநோயியல், இதய அறுவைசிகிச்சை யியல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் ரோபோ உதவியுடன் செய்யப்படும் என்று காவேரி மருத்து வமனையின் பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். சாமிநாதன் சம்பந்தம் கூறினார்.