districts

img

ஆவடியில் ரூ.3.94 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

அம்பத்தூர், ஜன.25- ஆவடி மாநகராட்சியில் ரூ.3.94 கோடியில்புதிய கட்டடங்களை  அமைச்சர் சா.மு.நாசர் சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு ட்பட்ட 1, 2, 4 ஆகிய மண்டல அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், திருமுல்லை வாயல் குளக்கரை தெரு, வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு, ஆவடி - திருமலை ராஜபுரம், பட்டாபிராம் - தண்டுரை ஆகிய பகுதி களில் சமுதாயக் கழிப்பிடம் தலா ரூ.25 லட்சத்தில் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், சோழம் பேடு பகுதியில் நுண் உரம் தயாரிக்கும் மையம் ரூ.1.30 கோடி மதிபீட்டிலும், ஆவடி காமராஜர் நகரில்  ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும், அதே பகுதியில் நியாய விலைக் கட்டடம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும், சோழம்பேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் கூடுதல்  வகுப்பறை கட்டடம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.3.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டன.  இந்நிலையில் சனிக்கிழமை மேற்கண்ட கட்டடங்களை சிறுபான் மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.  இதில் மேயர் கு.உதயகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி,  பொறியாளர் பி.வி.ரவிச்ச ந்திரன், மண்டலக்குழு தலை வர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா சேகர், என்.ஜோதி லட்சுமி, வி.அம்மு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.