தங்கசாலை மணிக்கூண்டு புதிய பேருந்து நிலையம் அருகே நார்த் வால் ரோடு - பெருமாள் முதலி தெரு சந்திப்பில் உள்ள மின்சாரப் பெட்டி துருபிடித்து அடிப்பாகம் முழுவதும் சிதைந்துள்ளது. மின்வடங்கள் அனைத்தும் தரையில் கிடக்கிறது. இது குறித்து நேற்றைய இதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து மின் ஊழியர்கள், மின்பெட்டியை சீர்செய்து உயர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டனர்.