districts

img

அரசு கட்டுப்பாட்டில் நடராஜர் கோவிலை கொண்டு வரக்கோரி கையெழுத்து இயக்கம்

சிதம்பரம், ஜூன் 19- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நடராஜர்கோவிலை பாதுகாப்பது குறித்து வரும் 20, 21 தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை தபால் மூலமாகவோ, நேரடியாக ஆலோசனைகளை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை யொட்டி நடராஜர் கோவிலைப் பாதுகாக்க வேண்டியும், நடராஜர் கோயிலுக்குத் தனிச்சட்டம் இயற்றி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சிதம்பரம் நகரம், கொத்தங்குடி, அண்ணாமலை நகர், மண் ரோடு, தெற்கிருப்பு  உள்ளிட்ட 30 மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர செயலாளர்  ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ஜெயசித்ரா,  நகர் குழு உறுப்பினர்கள், வார்டு கிளை செயலாளர் கள்  கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று நடராஜர் கோவிலில்  நடை பெறும் முறைகேடுகளை பொது மக்க ளுக்கு விளக்கிக் கூறி  கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் வரும் 20, 21-ல் கடலூரில் நடராஜர் கோவில் குறித்து நடைபெறும் ஆலோசனை கேட்பு கூட்டத்தில் அற நிலையத்துறை அலுவலர்களிடம் அளிக்க உள்ளனர்.