தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தை ஒட்டி தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதனன்று (பிப் 22) இனாம்அகரம், வடுக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் பெயர்ப்பலகை மற்றும் கொடி ஏற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி. டில்லிபாபு தகவல் பலகையை திறந்து வைத்தார். வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கெங்காதுரை கொடியேற்றி வைத்தார். மற்றும் மாநில துணைத்தலைவர் கணேசன் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா மாவட்ட தலைவர் டி. டில்லி மற்றும் 50க்கும் மேற்பட்ட வேட்டைக்கார மக்கள் கலந்து கொண்டனர்.