வாணியம்பாடி, ஜன. 23 - திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கூசமலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருபவர் ஆதிமூர்த்தி. இவர் 7 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை 7 ஆடுகளையும் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கட்டி விட்டு குடிசையினுள்ளே படுத்து தூங்கியுளார். ஞாயிறன்று காலை எழுந்து பார்த்த போது கட்டி வைத்திருந்த 7 ஆடுகளில் 6 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ஆங்காங்கே உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் 1 ஆடு மாயமாகி உள்ளது. சம்பவம் குறித்து ஆலங்காயம் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இறந்த ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.