districts

img

மறைமலை அடிகள் நினைவிடத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சென்னை, ஜூன் 15 -

     பல்லாவரத்தில் மறை மலை அடிகள் நினைவு இல்லத்தை தமிழ்மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

     தமிழறிஞர் மறைமலை அடிகள் தமிழ் ஆய்வாளர்.  தமிழையும் வட மொழி யையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். தமிழை, வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதி பிறரையும் ஊக்குவித்தவர். தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர். குல, சமய  வேறுபாடின்றி பொது மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வந்தார். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியையும் செய்தவர். 1950ம் ஆண்டு 75 வயதில்  மரணமடைந்தார். பல்லா வரம் சாவடி தெருவில் அவர் வசித்து வந்த வீடு, ‘மறைமலையடிகள் கலை மன்றம்’ என்ற பெயரில் நினைவு இல்லமாக மாற்றப் பட்டுள்ளது. இதனை தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் பராமரித்து வருகிறது.

   மறைமலையடிகள் கலை மன்றம் உள்ள இடத்தை லோகநாதன் முதலியார் என்பவர் 22.11.1957 அன்று சாரதா  அம்மாளுக்கு நன்கொடை யாக கொடுத்ததாகவும், அதனருகே இருந்த இடத்தை லோகநாத முதலி யாரின் வாரிசுகள், சைவ சித்தாந்த சங்கத்திற்கு 1978ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த இரு மனை களும் ஒரே சுற்றுச் சுவருக் குள் இருப்பதை பிரித்து  தடுப்பு சுவர் அமைக்கப் படுகிறது.

    இந்த இடத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முரு கன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி. பிரபா கரன் உள்ளிட்டோர் பார் வையிட்டனர். இதனை தொடர்ந்து ஆர்.வேல் முருகன் கூறுகையில், “தமிழறிஞர் மறைமலையடி கள் நினைவு இல்லத்தில் காஞ்சி மக்கள் அங்காடி (ரேசன் கடை) மற்றும் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தை தமிழ்நாடு அரசும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து மறைமலையடிகள் கலை மன்றத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், கலை மன்றத்தை தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்” என்றார்.