சென்னை, பிப். 8 - கோவிலையும், அதன் சொத்துக்களையும் பாது காக்காமல் முறைகேடு களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்து சமய அறநிலை யத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்து அனு பவித்து வருகிறது. 2007ஆம் ஆண்டு முதல் மாத வாடகை 2.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 2016இல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப் பட்டதால் மாத வாடகை 4.50 லட்சம் ரூபாயாக செலுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் 3 கோடி ரூபாய் பாக்கி தொகையை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அறநிலை த்துறை இணை ஆணையர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பிய நோட் டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், கோவில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட வேண்டும். அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என அறநிலை யத்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கோவிலை அறநிலை யத் துறை தனது கட்டுப்பாட் டில் எடுத்துக் கொண்ட பிறகு, அந்த கோவிலின் நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையை கடைபிடித்க வேண்டும். கோவிலையும், அதன் சொத்துக்களையும் பாதுக்காக்க வேண்டிய கடமை கோவில் நிர்வாகத் திற்கு உள்ளது. அந்த கட மையை செய்யாமல் முறை கேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல், அற நிலையத்துறை சட்டத்தை மீறுவதாகும். கோவில் நன்கொடையாளர்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை மீறும் செயலாகும். இந்த கிளப்புக்கு 2016ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் வாடகையை நிர்ணயித்து, அதன்படி வாடகை மற்றும் பாக்கியை வசூலிக்க அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது. எனவே, அந்த வாடகையை மயிலாப்பூர் கிளப் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.