மாற்றுத்திறனாளியை அடித்துக் கொன்ற சேலம், சேந்தமங்கலம் காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதியக்கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் சேத்துப்பட்டு சிக்னல் அருகே செவ்வாயன்று (செப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் மனோகரன் ஆகியோர் பேசினர்.