ஓசூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி கடந்த 2014 டிசம்பரில் உயிரிழந்தார். அவரது மகள் சூர்யாவுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான பணிநியமன ஆணையை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா வழங்கினார். ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, பணி நியமனக்குழு தலைவர் எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சீனிவாசலு, மாதேஷ், மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.