அணைக்கட்டு,ஜூலை 25-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்லை. இதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் 35 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சாலை வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, உயிரிழப்பு களும் நடந்தது. இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு முறையான தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோரிக்கை வைத்தனர்.
அதன்படி முதல் கட்டமாக முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை 6.4 கிலோ மீட்டர் தொலைவு ரூ.5.11 கோடியில் முதல் முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த னர்.
இதையடுத்து தொடர்ந்து பீஞ்சமந்தை மலை மீது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி, வீடு கட்ட ஆணை, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை என ரூ.9 கோடியில் நலத்திட்டங்களை வழங்கினர்.