மதுராந்தகம், டிச. 2- புதுப்பட்டு ஊராட்சியில் இருளர் பழங்குடியின ஊராட்சி மன்ற தலை வரின் பெயரில் கையாடல் செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவரது கணவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த சாந்தி செல்வம் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இருளர் பழங்குடி சமுத்தைச் சார்ந்த சாந்தி கல்வி அறிவு பெறாதவர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி துணைத் தலைவர் மஞ்சுளா, அவரது கணவர் சண்முகம் மற்றும் 4வார்டு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அம்பலம் ஆகியுள்ளது. சாந்தி கல்வி அறிவு பெறாத காரணத்தினால் அலுவலக கோப்பு களை சரி வர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அனைத்து வரவு செலவுகளையும் கவனித்து வருகின்றனர். ஊராட்சி மன்றத்தில் நடை பெறும் வரவு,செலவு மற்றும் வரி வருமானங்கள் தனியார் நிறு வனங்கள் செலுத்தும் வரிகள் அனைத்தையும் ஊராட்சி மன்ற தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருவதை தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர் ஊராட்சி மன்ற தலைவரிடம் வரவு செலவு கணக்கு காட்டுவதில் முறைகேடு செய்து ரூ.40 லட்சம் வரை கையாடல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இத் தகவல்கள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியை நேரில் சந்தித்து விசாரிக்கும் போது ஊராட்சி திட்டப்பணிகள் மற்றும் வரவு செலவினம் சம்பந்தமாக எனக்கு தெரி யாமலே நடைபெறுகிறது என்றும் அலுவலக கோப்புகள் தொடர்பாக செயலாளர் ஏதும் என்னிடம் விளக்கிக் கூறியது இல்லை எனவும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றால் துணைத் தலைவர் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்றும் இனி வர வேண்டாம் என்றும் ஓடிபி நம்பர் வரும்போது மட்டும் வந்து சொன்னால் போதும் என்றும் துணைத் தலைவரின் கணவர் சண்முகம் மிரட்டுவதாக தெரிவித்தார். மேலும் வரவு செலவு கணக்கு களை என்னிடம் தெரிவிக்காமல் தேவைப்படும்போது மட்டும் எனது கையெழுத்தை போடச் சொல்வார். இது மட்டுமின்றி எனது கையெழுத்தை அவரே போட்டு நிதி முறைகளில் ஈடுபட்டுள்ளது இப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது. இதற்கு உடந்தையாக ஊராட்சி செயலர் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள் கூட்டாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய துணைத் தலைவர் அவரது கணவர் சண்முகம் மற்றும் நான்கு வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டு மென மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் அழகேசன் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் தெரி வித்துள்ளார்.