districts

மவுண்ட் பார்க் மேல்நிலைபள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை

கள்ளக்குறிச்சி, மே 20-

   கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுரு கம் , மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.  

   தியாகதுருகம் மவுண்ட்  பார்க் பள்ளி யில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை 325 பேர் எழுதினர். இவர்களில் 322 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 99 ஆகும். மாணவி அகக்ஷயா 491 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 98. சமூக அறிவியல் 96, கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்று  சாதித்துள்ளார்.மாணவி ஆர்த்தி,பாசிலுர் ரஹ்மான் ஆகியோர் 487, வானவில் லாவண்யா 486 மதிப்பெண் பெற்று  பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர்.  

   அறிவியல் பாடத்தில் 3 பேர், கணிதத்தில்  2 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து  சாதனை படைத்துள்ளனர். 491 மதிப்பெண் ணுக்கு மேல் ஒருவர், 480 க்கு மேல் 10  பேர்.450 க்கு மேல் 58 பேர்,425க்கு மேல் 102 பேர்  400க்கு மேல் 140 பேர் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதே போல் மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாதெமி  பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 விழுக்காடு வெற்றியுடன் பள்ளிக்கு பெருமை சேர்த் துள்ளனர். மாவட்ட அளவில் சிறப்பிடமும். முக்கிய பாடங்களில் சென்டம் எடுத்து சாதனைப்படுத்த மாணவர்களை தாளாளர் மணிமாறன் பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, ஸ்பெஷல் அகாதெமி பள்ளி  முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர்  வினோதினி உடனிருந்தனர்.