மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலைவர் மூசாவின் பேரன் பாட்சாமியன் - முகமது சபானா திருமணம் ஞாயிறன்று (ஜூன் 4) சிதம்பரத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை மக்கின், திமுக கடலூர் மாவட்ட (கிழக்கு) பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.