வேலூர், நவ. 20 - இந்திய கதிரியக்க மருத்துவியல் மற்றும் இமேஜிங் சங்கம் சார்பில் பிராக்டிகல் ரேடியாலஜி பற்றிய கருத்தரங்கம் வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமைப்பின் தலைவர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். இந்திய கதிரியக்க மருத்துவியல் மற்றும் இமேஜிங் சங்க வேலூர் கிளை தலைவர் டி. மதன் மோகன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து மாநில செயலாளர் புளோரா நெல்சன் விளக்கி கூறினார். இன்றைய காலகட்டத்தில் கதிரியக்க மருத்துவத்தில் உள்ள சட்ட ரீதியான பிரச்சனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் அமைப்பதில் வங்கி நிதியுதவி பற்றியும், எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவைகளை நவீன தொழில்நுட்ப ரீதியாக எளிதாகவும், துல்லியமாகவும் கையாளுவது பற்றி விவாதித்தனர். கருத்தரங்கினை ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்து பேசுகையில், மருத்துவ பரிசோதனையில் நோயின் தன்மை அறிவதற்கு கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ சிகிச்சையில் துல்லிய மாக நோய் கண்டறிவதில் இந்த தொழில் நுட்பம் கதிரியக்க மருத்துவர்க ளுக்கு பேருதவியாக உள்ளது என்று கூறினார். இதில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கதிரியக்க துறை மருத்துவர்கள் ஷியாம், ஸ்ரீதர், சங்க வேலூர் கிளை பொருளாளர் சஹானா, நரம்பியல் மறுவாழ்வு நிபுணர் மைக்லே ராஜன், நறுவீ மருத்துவமனை கதிரியக்க துறை தலைவர் அசோக் மித்ரா, குருகிருஷ்ணா, பிரியங்கா கலை யரசன், திருப்பூர் ‘நேத்ரா ஸ்கேன்ஸ்’ பி. தேவராஜன், சென்னை ‘மைன்ட் பிஸ்’ ஸ்கேன் சென்டரின் தலைமை செயல் அலுவலர் ஆர். சுப்பிரமணியன், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். நிறைவாக வேலூர் கிளை செயலாளர் பிராங்க்ளின் இர்வின் நன்றி கூறினார்.