சென்னை, மார்ச் 16- சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும் வகையில், டிஎக்ஸ்சி தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் நவீன வகுப்பறைகள் ( ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கப்பட்டுள்ளன. சமர்த்தனம் அறக்கட்டளை வழங்கிய இந்த வகுப்பறை களை சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜய ராணி திறந்து வைத்தார். டி.எக்ஸ்.சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு அதிகாரி ஏஞ்சலின் ஜெயசீலன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ். மார்ஸ், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ரோஸ் நிர்மலா, சென்னை மாவட்ட கல்வி அதிகாரி பி. ரவிச்சந்திரன், சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி கே. சண்முகசுந்த ரம், சமர்த்தனம் அறக்கட்டளை அறங்காவலர் வசந்தி சவனூர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். டி.எக்.சி தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் இந்தத் திட்டம் மெய்நிகர் வகுப்பு அறைகள், மின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இந்த நன்கொடை யால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பட்ட கல்வியை எளிதாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.