districts

img

காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா: எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்

அம்பத்தூர், ஜன. 12- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திரு முல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 3,000க்கும் மேற்பட்ட  குடியிருப்புகளில் காவலர்கள் வசிக்கின்றனர்.  இந்த குடியிருப்பில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசருக்கு காவலர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.25 லட்சம்  என ரூ.50 லட்சம் நிதியில், 11,000 சதுர அடி பரப்பளவில் 2.5 மீட்டர் அகலம், 125 மீட்டர் நீளம் கொண்ட நடை பாதை, உடற்பயிற்சி கூடம், சிறுவர் கள் விளையாட உபகரணங்கள், மின்விளக்கு கள், ஏராளமான செடிகள் அடங்கிய பூந்தோட்டத்துடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.  இதையடுத்து பூங்கா திறப்பு விழா வெள்ளியன்று (ஜன. 12)  நடைபெற்றது. பூங்காவை சட்டமன்ற உறுப்பினர் ச.மு.நாசர் தலைமை தாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் மேயர் கு.உதயகுமார், ஆயுதப்படை கூடுதல் இயக்குநர் எச்.எம்.ஜெயராம், துறைத்தலைவர் எஸ்.லட்சுமி, சிறப்புக் காவல் படை 2ஆம் அணியின் தளவாய் ஆர்.அந்தோணி ஜான்சன் ஜெயபால், ஆவடி மண்டலக்குழு தலைவர் அமுதா சேகர், உதவி செயற்பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.