districts

img

சென்னை எர்ணாவூர் பகுதிகளில் நிறுவப்பட்ட புதிய ட்ரான்ஸ்பார்மரை எம் எல் ஏ கே.பி. சங்கர்  துவக்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வட்டம் எர்ணாவூர் பஜனைகோயில் தெரு, மேட்டுதெரு, மாகாளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்விநியோகம் பெரும் பிரச்சனையாக இருந்தது. இதனை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மின்வாரிய கவனத்திற்கு கொண்டு சென்றதையொட்டி குறைந்த மின்அழுத்தம் சரி செய்யப்பட்டு புதிய ட்ரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர்  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.