districts

img

நிறுத்தப்பட்டுள்ள அனைத்து கல்வி உதவித் தொகைகளையும் வழங்குக

செங்கல்பட்டு, டிச.24- சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப் பட்டுள்ள அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் தொகைகளை வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது. குழுவின் செங்கல்பட்டு மாவட்ட 4வது மாநாடு மாவட்டத் துணைத் தலைவர் இ.சங்கர் தலைமையில் சனிக்கிழமை (டிசம்பர் 23) செங்கல்பட்டில் நடைபெற்றது.  ஜெ.சுந்தர் சிங் வரவேற்றார். நலக் குழுவின் மாநில குழு உறுப்பினர் எஸ்.எம்.ஹனீஃப் துவக்கி வைத்து  உரையாற்றினார். மாவட்டச் செயலாளர்.பி.சண்முகம்  வேலை அறிக்கையை முன் வைத்தார்.  தமுஎகச செங்கல்பட்டு மாவட்டத் தலை வர்.இ.சங்கரதாஸ், செங்கல்பட்டு  காஞ்சி புரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் . மெளலவி.கே.முஹம்மது அசாருதீன் காஷிஃபி, அருட்தந்தை சாக்கப் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொதுச் செயலாளர்.எம்.ராம கிருஷ்ணன் பேசினார். இ.முகமது நசூ ருல்லா நன்றி கூறினார். தீர்மானங்கள் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை தடுத்திட வேண்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படி மதச் சிறுபான்மையினர் உரிமைகளை வென்றெடுத்திட வேண்டும், சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமுல்படுத்திட வேண்டும், முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கிட வேண்டும், முஸ்லீம், கிருத்துவர்களின் பட்டா இடங்களில் மசூதி, தேவாலயங்கள் கட்ட தாமதமின்றி அனுமதி வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் புதிய நிர்வாகிகளாக தலை வர் ஜெ.சுந்தர்சிங், மாவட்டச் செயலாளர் பி.கே.ரபிக், மாவட்ட பொருளாளராக.பி.சண்முகம் உள்ளிட்டு 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.