குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்வை சென்னையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மக்களவை உறுப்பி னர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், து.மு. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.பி.நந்த குமார், அமலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, வெங்கந்தூர் ஊராட்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மயிலம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் பேரூராட்சிக்குட்பட்ட பெரிய மாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷி வந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் வசந்தம் கார்த்திகேயன் முன்னி லையில் வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாக துருகம் பேரூராட்சி தலைவர் வீரா சாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். திருவண்ணாமலை துராபலி தெருவில் செயல்பட்டு வரும் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலை கடை யில், சட்டப்பேரவை துணைத் தலை வர், கு.பிச்சாண்டி பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.