districts

img

மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர்கள் ஆய்வு

மாமல்லபுரம், ஜுன் 30-

     செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான 6.79 ஏக்கர் இடத்தினை சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர்  மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை விரிவுபடுத்த அரசு துறைசார் அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். 6.79 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடியில் அமையவிருக்கும் பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் அளவிற்கு கட்டப்படவுள்ளது.   புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பின்னர். பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து குறையும் என  கணக்கிடப்பட்டுள்ளது புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஜூலை மாதம் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும்  கிளாம்பாக்கம், கூத்தம்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள், முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்து நிலையம்  அமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப் பட்டுள்ளது. மற்ற இடங்க ளில் மந்த நிலையில் நடை பெற்று வரும் பேருந்து நிலைய கட்டு மான பணிகளும் விரிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

   வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  முதன்மைச்  செய லாளர்   செல்வி அபூர்வா,  சென்னை  பெருநகர்  வளர்ச்சிக்  குழும உறுப் பினர் செயலர்  அன்சூல் மிஸ்ரா,  திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பாலாஜி,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  ஆ.ர. ராகுல்நாத், திருப்போரூர்  ஒன்றிய  குழுத்  தலைவர்   இதயவர்மன்,  மாமல்ல புரம் பேரூராட்சி தலைவர்  வளர்மதி மற்றும்  துறை  சார்ந்த  அலுவலர்கள் உடனிருந்தனர்.