districts

மிதக்கும் உணவக கப்பல் அமைச்சர் ஆய்வு

சென்னை, ஜூன் 29-

      ரூ.5 கோடியி 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான மிதக்கும்  உணவக கப்பல் அமைக்கும்  பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

    செங்கல்பட்டு மாவட்டம்,  முட்டுக்காடு தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக் கழக  படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125  அடி நீளம், 25 அடி அகலத் தில் பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டு மான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வியாழனன்று (ஜூன் 29) நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.  

    சென்னை கிழக்கு கடற் கரைச் சாலையில் அமைந் துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி  கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள் ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகு கள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

   மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில் ரூ.5  கோடியில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில்  பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக  கப்பல் பயணம் தொடங்கப் பட உள்ளது.  

    இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்  கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது  பங்களிப்பு திட்டத்தின் மூலம்  செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.5 கோடியாகும். தமிழ்நாட்டில் முதல் முறை யாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படு கிறது.  

    இந்த மிதக்கும் உணவ கத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.