ஊத்துக்கோட்டையை அடுத்த கன்னிகைப்பேரில் வியாழனன்று (மே 12) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.