districts

img

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிதம்பரம் நகரில் பிரச்சாரம்

சிதம்பரம், பிப்.16- சிதம்பரம் நகராட்சியில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு  கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கோரி  தில்லை அம்மன் கோவில் அருகே பிரச்சாரம் நடைபெற்றது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்குகள் ஆதரவு கோரினார்.  திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா,மாவட்டக்குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். கடலூர் மாநகராட்சியில் 36-வது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் மாலதி சுப்புராயனை ஆதரித்து மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி செல்லங்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி னார்.  21 வது வார்டில் போட்டியிடும் தேவிக்கும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் டி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பு ராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.