சென்னை, ஏப். 19 - தாம்பரம் ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கு விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் உறுதியளித்தார். தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிராமம், ராஜீவ்காந்தி நகரில், சர்வே எண்.113ல் 2.33 ஏக்கர் நிலத்தில் 102 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் நான்கு தலைமுறைகளக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு குடிமனைப் பட்டா கேட்டு 2006ம் ஆண்டி லிருந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இதனையடுத்து செங்கல்பட்டு, வேத நாராயண புரம் கிராமம், தேவர்மலைப் பகுதியில் 4.66 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை 2015ஆம் ஆண்டு வனத்துறைக்கு வருவாய்த்துறை கொடுத்துவிட்டது. ஆனால், வனத்துறை நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா. கிருஷ்ணா, பகுதிக் குழு உறுப்பினர் ராஜன்மணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்து வதாக உறுதியளித்தார்.