districts

img

மாற்றுத்திறனாளிகள் தின விழா: அமைச்சர் பங்கேற்பு

ராணிப்பேட்டை, டிச. 16 -  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை யன்று (டிச. 16)  நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு ரூ.15.59 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமை தாங்கினார். ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நவீன செயற்கை அவ யங்கள், பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 30 மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசு களை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூ. சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தி. ெஜயந்தி திரு மூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழுத் தலை வர் சே.வெங்கட்ராமன், நகர மன்ற தலை வர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முஹம்மது அமீன், பவளக்கொடி சரவணன், முடிநீக்கு தொழில்நுட்பாளர் ச. ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.