மாமல்லபுரம்,மே 18-
கடலூர், சேனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது35). மீனவர். இவரது மனைவி உஷா. இவர்க ளுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதனன்று ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் அமைச்சர் மெய்யநாதனின் கார் எதிரே வந்த ஜான்சனின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சன் சம்பவ இடத்தி லேயே பலியானார். அவரது மனைவி உஷா பலத்த காயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். விபத்து நடந்த போது அமைச்சர் மெய்யநாதன் காரில் பயணம் செய்ய வில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடு துறை சென்று இருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வருவதற்காக கார் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.