சிதம்பரம்,ஏப்.9- சிதம்பரம் உட்கோட்ட காவல்துறையினருக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளா கத்தில் மினி மாரத்தான் நடத்தப்பட்டது. சிதம்பரம் உட்கோட்ட டி.எஸ்.பி ரமேஷ் ராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலி பேடிலிருந்து பல்கலைக் கழக வாயிலிலுள்ள ராஜேந்திரன் சிலை வழி யாக சென்று மீண்டும் ஹெலிபேடு அடைந்தனர். மொத்தம் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தானில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனும் கலந்து கொண்டார். மாரத்தான் சென்ற வழி களில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் உற்சாகப்படுத்தினர். இதில் முதலில் வந்த 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசாக புத்தகத்தை வழங்கினார். இந்த நிகழ்வு காவலர்க ளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையி லும் உடலை கட்டுக்கோப்பாக வும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக நடைபெற்றது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.