சென்னை, மார்ச் 16- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொது மக்கள், மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வியாழக் கிழமை (மார்ச் 16) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மெட்ரோ ரயில் சேவை கள் வார நாட்களில் திங்கட்கி ழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப் படும். மெட்ரோ ரயில் சேவை கள் வழக்கம் போல் நெரிசல் மிக்க நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையி லும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடை வெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடை வெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை கள் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.