மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் தி.நகர் பனகல் பூங்கா பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை, நவ.24- மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் நடை பெற்று வரும் நிலையில், பனகல் பூங்கா பகுதி யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள், பனகல் பூங்கா பகுதியில் நடை பெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் அமைப்புக்கான கட்டுமான பணிகள் வெங்கட் நாராயணா சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட் டுள்ளது. இதனால், திங்கள் முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஒருவாரம் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழி யாக வெங்கட் நாராயணா சாலைக்கு செல்வ தற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக சென்று வெங்கட்நாராயணா சாலையை அடைந்து, தங்கள் இலக்கை அடையலாம். மேலும், அப்பகுதி மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழி யாக ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் வரை இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப் படும். இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, நவ. 24- சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் ஓட்டு நர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத் தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்க ளுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்த ப்பட்டிருக்கும். சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத் தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு). 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கடந்த 22.10.2024 அன்று செய்தி வெளியிடப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
புத்தாக்க தொழில்நுட்ப திறன் தொழில்முனைவு சங்க கருத்தரங்கு
சென்னை, நவ. 24- புத்தாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன் மற்றும் தொழில்முனைவு திறனை சிறப்பாக பயன்படுத்துவது தொடர்பாக இந்திய தொழில்நுட்ப நிலையத்தின் (ஐஐடி பாம்பே) வணிக அடைக்காத்தல் தொழில் முனைவு சங்கமான (எஸ்ஐஎன்இ) சார்பில் கருத்தங்கம் நடைபெற வுள்ளது. இந்த சங்கத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நவ.28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இக்கருத்தரங்கு நிகழ்வில் செல்வா க்குமிக்க பேச்சாளர்களின் சிறப்பு ரைகள் இடம் பெறும். புதிய கண்ணோட்டத்தை வழங்கும் குழு விவாதங்கள், தொழில்முனை வோர்கள், முதுநிலை அரசு அதிகாரி கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகி கள் பங்கேற்கும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கமும் நடை பெறவுள்ளது.
காலமானார்
சென்னை, நவ. 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதி, 133 வது வட்ட பெண்கள் கிளை உறுப்பினர் தோழர் டி.சரஸ்வதி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை யன்று (நவ.23) காலமானார். அவரது உடலுக்கு கட்சி யின் தென்சென்னை மாவட்ட க்குழு உறுப்பினர் இ.மூர்த்தி, பகுதிச் செயலாளர் எம்.குமார், பகுதிக்குழு உறுப்பி னர்கள் ஜி.ரவி, கே.சாந்தி, ஆர்.குமார், எஸ்.தமிழ் செல்வி, ஏ.தென்னரசு, கிளை செயலாளர்கள் எம்.சங்கர், கே.ஜோதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (நவ.24) கண்ணம்மாபேட்டை மயா னத்தில் நடைபெற்றது.
ஆற்காட்டில் ஆட்டோ கிளை உதயம்
ராணிப்பேட்டை, நவ. 24– ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் சந்திப்பு பகுதியில் ஆட்டோ சங்க பேரவை கூட்டம் ஞாயிறன்று (நவ.24) நடைபெற்றது. ஆட்டோ தொழிலா ளர்கள் சார்பில் மாவட்டத் தலைவர் பி. மணி தலை மையில் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ. தவராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கே.கே.வி. பாபு, பொருளாளர் கே.ரமேஷ், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் டி. சந்திரன், சிபிஎம் ஆற்காடு தாலுகா செய லாளர் ஜி. மதியழகன் ஆகி யோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தேர்வு கவுரவ தலைவராக டி. சந்திரன், தலைவராக டி. லோகநாதன், செயலாளராக எஸ். தினேஷ்குமார், பொருளாளராக கே.வி. பாபு ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
ரவுடி படுகொலை
சென்னை, நவ. 24- எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பாலா (25). இவர் மீது 11 வழக்குகள் உள்ளன எண்ணூர் காவல் நிலை யத்தில் இவர் ரவுடி பட்டிய லில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையாகி ஆந்திர மாநிலத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக் கிழமை அன்னை சிவகாமி நகர் வந்துள்ளார். தனது நண்பர் தியாகராஜனுடன் இரண்டு சக்கர வாக னத்தில் 8வது தெருவில் இருந்து 5ஆவது தெரு வுக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கு ஏற்கனவே முன்பகையாக இருந்த சஞ்சய், சூர்யா, ஈஸ்வரபாண்டியன் மற்றும் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர் அப்போழுது அவர் களைப் பார்த்ததும் வீட்டிற்கு சென்று கத்தியோடு வந்து பாலா சண்டையிட்டு அவர்களை தாக்கியுள்ளார். பாலா போதையில் இருந்ததால் அவர்கள் பாலா வை திருப்பித் தாக்கி அவரது கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.