சென்னை, ஏப்.17- சென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது மெட்ரோ ரயிலுக்கான 2-ம் கட்டத்தில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடம் அமைப் பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரே ரயிலில் சுமார் இரண்டரை மணி நேரத்தில் சென்னை மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகள் வழியாக மாநகரத்தை வட்டமிடும் வகையில் ஒரு ரயில் வட்ட பாதை அமைக்க திட்டமிடப் பட்டு இருந்தது. மாதவரத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையிலும், கிழக்கில் அடை யாறு வழியாகவும், சென்னையின் மேற்கில் கோயம்பேடு வரையிலும் வட்ட பாதை 81 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த வட்ட பாதை 3 மற்றும் 5-வது வழித்தடத்தை இணைக்கும். இந்த வட்ட பாதை அமைப்பதால் காலவிரயம், எதிர் காலத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் 45.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடம்-3, மாதவரம் பால்பண்ணை காலனியை சிறுசேரி சிப்காட்டுடன் இணைக்கிறது. அதேபோல், 47 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வழித்தடம்-5 மாத வரம் பால்பண்ணை காலனியை சோழிங்கநல்லூருடன் இணைக்கி றது.
இதில், வழித்தடம்-5-ல் உள்ள மேடவாக்கம் செல்வதற்காக, 3-வது வழித்தடத்தில் செல்லும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வட்ட பாதை திட்டம் கைவிடப்படுவதால் சோழிங்கநல்லூரில் இறங்கி பிளாட் பாரம் மாறி திரும்பி செல்ல வேண்டும். முன்னதாக, வட்ட பாதையில் ரயில் இயக்கத்தை தொடங்குவ தற்காக, வழித்தடம் 3 மற்றும் 5-ல் தலா 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 நெடுவரிசையில் சாலையின் நடுவில் தூண்களுடன் உயர் மட்டப் பாதை அமைக்க திட்டமிட்டு, ஒக்கி யம் துரைப்பாக்கத்தை வழித்தடம்- 3-ல் எல்காட் மற்றும் சோழிங்க நல்லூர் மெட்ரோவைக் கடந்து தனித் தனி வழித்தடங்களை அமைக்க திட்ட மிட்டது. விரிவான திட்ட அறிக்கையின் படி, இந்த பாதையில் 8.5 நிமிட இடை வெளியில் ஒவ்வொரு மணி நேரத் திற்கும் 7 ரயில்கள் இயக்கப்பட வேண்டும். 2-ம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்களில் தனித்தனியாக இயக்கப்படும் ரயில்களுக்கு கூடுத லாக இந்த வட்ட பாதை இருந்தது. ஆனால் சாலையின் நடுவில் தூண்க ளுடன் கட்டப்படும் உயர்மட்ட பாதை களின் கட்டுமானமானது சாலைக ளுக்கு இடையூறாக இருக்கும். அத்துடன், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கத்தின்போது இடை யூறுகளை ஏற்படுத்தலாம். அப்பகுதி யில் ஒரு உயரமான கட்டிடத்தின் நுழைவாயில்கள் வழியில் உள்ள தால் அதையும் இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே தற்காலி கமாக வட்ட பாதை திட்டம் கைவிடு வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பயணி களின் வரவேற்பு அதிகரிக்கும் போது, வட்ட பாதையில் ரயில்களை இயக்க முடியும். அதற்காக, இரண்டு வழித்தடங்களையும் இணைக்கும் வகையில் கூடுதல் பாதை அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.