மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாதர் சங்கத்தின் முன்னோடியுமான தோழர் என்.அம்சம்மாள் புதனன்று (மே 25) காலமானார். அவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமையில் வியாழன்று (மே 26) நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் அவரை நினைவு கூர்ந்து பேசினர்.