சென்னை, பிப். 1- 41ஆவது வட்டத்தில் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் படுமா? என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா கேள்வி எழுப்பினார். சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் புதனன்று (ஜன. 31) நடைபெற்றது. கூட்டத்தில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா பேசு கையில், கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் வணிக வளாகத்தின் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்பதை இந்த மன்றம் விளக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் அந்த இடத்தை மக்களுக்கு பயன்படும் வகை யில் பயன்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும் என்றார். சேத்துப்பட்டு நேரு பார்க் பின்புறம் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தேவைப்படும் தார் கலவையை தயார் செய்ய ஹாட் மிக்ஸ் பிளான்ட் நன்றாக செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பிளான்ட் மூடப்பட்டுள்ளது. இதனால் சாலை பராமரிப்பு பணிகளுக்கு தனி யாரை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை கைவிட்டு பழையபடி அந்த பிளான்டை செயல்படுத்தவேண்டும். உட்புற சாலைகளை புதிதாக போடுவதற்கு மாநகராட்சி சார்பில் பேக்கேஜ் அடிப்படையில் ஒப்பந்தம் வெளியிடப்படுகிறது. இதனை அருகருகே இருக்கும் வட்டங்களை ஒன்றிணைத்து நடத்தினால் ஒப்பந்த தாரர்களின் செயல்பாட்டை கண் காணிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் தற்போது நடைமுறையில் வெவ்வேறு தொலைவில் உள்ள வட்டங்களை ஒன்றிணைத்து ஒப்பந்தம் விடப்படு வதால் ஒப்பந்ததாரர் எந்த சாலையை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளது. சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தம் விட்டு பல மாதங்களாகியும் இதுவரை பல இடங்களில் சாலைகள் போடவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. 41ஆவது வட்டத்திலும் பல சாலைகள் போடப்படாமல் உள்ளன. 41ஆவது வார்டு திருவள்ளூர் நகரில் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் ஒரு மினி பார்ட்டி ஹால் கட்டித் தர வேண்டும்.
மண்டலம் 4இல் பல அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. செயற்பொறியாளர் என்ற நிலையில் உள்ள ஆர்.கே. நகர் பகுதியை கவனிக்கும் அதிகாரி செயல்படாமல் உள்ளார். இதனால் மண்டலம் நான்கில் பல்வேறு பணி கள் பாதிக்கப்படுகிறது. செயல்படாத அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் திட்டங்களை மக்களி டம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். துப்புரவு பணியில் மோசமான நிலையில் உள்ள 4ஆவது மண்டலத் திற்கு போதிய ஆட்களை பணியமர்த்த வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மேயர் வட்டம் உள்ள மண்டலம் என்பதாலும், முதலமைச்சர் தொகுதி என்பதாலும் இப்படி கூடுதல் அழுத்தம் என்றால் சாதாரண மக்கள் வசிக்கக்கூடிய வார்டுகளை தூய்மைபடுத்த அதே அளவு கவனம் செலுத்தவேண்டாமா என்று கேள்வி எழுப்பினார். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் ராம்கி, உர்பேசர் போன்ற தனியார் நிறுவனங்களின் பணியாளர்க ளுக்கும் சம்பளம் உயர்த்தி வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். 41ஆவது வார்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். குடிநீர் வாரி யம் பெரம்பூரில் இருந்து அமைத்து வந்த வந்த குடிநீர் இணைப்புகள் ஆர்.ஆர். நகரில் முடிவு பெற்றுள்ளது. அதனை எழில் நகர் வரை விரி வாக்கம் செய்து பைப் லயனில் இணைத்து ஒரு மோட்டார் அமைத்து சீரான தரமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பா.விமலா கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து மேயர் பிரியா பேசுகையில், 41ஆவது வட்டத்தில் மினி பார்ட்டி ஹால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரிடம் கலந்து பேசி அனைத்து வார்டுகளிலும் கூடுதலாக துப்புரவு பணியாளர்களை ஆட்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சேத்துப்பட்டு ஹாட் மிக்ஸ் நிறுவனத்தை ஆய்வு செய்து மீண்டும் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசிலீக்கப்படும். மேலும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி குடிநீர் பிரச்ச னையை தீர்க்க உரிய கவனம் செலுத்தப்படும் என்றார்.