சென்னை, ஜூலை 29-
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மருத்துவ சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்று சமீபத்திய சாதனங்களை காட்சிப்படுத்தியுள்ளன. எக்ஸ்ரே சாதனங்களை உற்பத்தி செய்யும் லேடோமி எலெக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அலெரியோ எக்ஸ்-ரே என்ற பெயரில் பெரிய மற்றும் எங்கும் எளிதாக கொண்டு செல்லும் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நோயறிதலுக்கான எக்ஸ்-ரேக்களை தயாரிப்பதில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது. முன்னதாக இந்த சாதனங்களை காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் செல்வராஜ், அப்பல்லோ கதிரியக்கவியல் பிரிவு ஆலோச கர் டாக்டர் ஜெயராஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அறிமுகப் படுத்தி பேசினர்.