மதுராந்தகம், மார்ச் 25-– மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மதுராந்தகம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளியன்று (மார்ச் 25) நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பேசினார். இதில் 75 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.